Friday, 4 December 2015

Public sex பொது இடமான கோவிலில் இல்லாத ஆபாசமா - கடவுளுக்கு ஒரு நியாயம் எனக்கு வேறேயா!

கேள்வி:  ஐயா, அனேக இந்து கோவில்களில் பல நிலையில் பாலுறவு காட்சிகள் உள்ள சிலைகள் இருப்பதைக் கண்டிருக்கிறேன். பொது இடமான கோவிலில் அதை அனுமதிக்கும் சமூகம், மனிதன் அப்படி பண்ண அனுமதிப்பதில்லையே ஏன்?

என் பதில்:
கோவில்களில் அது போன்ற சிற்பங்கள் இருப்பதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள். முற்காலத்தில் சமூகத்தில் பாலியல் அறிவு மிகவும் குறைவாக இருந்த படியால் அவர்கள் தெரிந்து கொள்வதற்காக அப்படி எல்லாம் சிற்பங்கள் வைக்கப்பட்டன என்பது அதில் ஒன்று. இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

கோவில் என்பது கடவுள் குடியிருக்கும் இடம் ஆக கருதப்படுகிறது. இந்து புராணங்களில் காணப்படும் கடவுள்களின் ஒழுக்க நெறி மற்றும் பாலியல் வேட்கையே அப்படிப்பட்ட சிற்பங்களுக்கு காரணமாக இருக்குமோ என்று நான் சந்தேகப்படுகிறேன்.

மேலும் அக்காலத்தில், தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தபடியால் அனேக கோவில்கள் வேறுபல விஷய்ங்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்படி பல காரணஙளை நாம் அடுக்கிக் கொண்டு போனாலும், பொதுவில் உடலுறவு மற்றும் பாலியல் சார்ந்த விஷயங்களை இந்தியாவில் பேசுவது இன்னமும் குறைவாகவே இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்தான். பொதுவில் தெளிவு பெறுவதற்காக பேசுவது என்பது வேறு, பொதுவில் public sex என்பது முற்றிலும் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் மிருகங்கள் அல்ல என்றும், ஆறறிவுள்ள மனிதர்கள் என்பதையும் மனதில் கொண்டு, செய்ய வேண்டியவைகளை மட்டுமே பொதுவில் செய்யவேண்டும். அதுவே முறை. யாராயிருந்தாலும். கற்காலாலான சிலைக்கும், கற்கால மனிதர்களின் சிந்தனைக்கும் நம் சிந்தனை எவ்வளவு மேம்பட்டது என்பதை நாம் புரிந்து அதை செயல்படுத்த வேண்டும்.

பைபிள் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம் என்று சொல்கிறது. சொந்த மனைவியைத் தவிர அல்லது திருமணம் ஆவதற்கு முன்பு எந்தப் பெண்ணையும் இச்சையுடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நல்ல நினைவுகளே நல்ல விளைவுகளை உண்டாக்கும். பொது இடத்தில் மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு உண்டாக்காத விதத்தில், பேச்சிலும், செயலிலும் மற்றும் நடை உடை பாவனையிலும் இருப்பது நம் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவாவது பயன்படும். இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்.

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி
tcsdoctor@gmail.com

Monday, 30 November 2015

செக்ஸ் சிந்தனைகளை மேற்கொள்வது எப்படி?

இன்றைய அதிவேக மொபைல் உலகில் அனைத்தும் விரல்நுனியில் இருக்கையில், இதுபோன்ற சில கேள்விகளுக்கான விடைகாணுவதில் மனிதன் என்றுமே தடுமாறத்தான் செய்கிறான். இன்று இணைய உலகில் நாம் விரும்பாமலேயே தவறான வலைதளங்கள் மற்றும் வீடியோக்கள் நம் பார்வைக்கு வரும் சூழலில் பல விதங்களில் நம் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு அதற்கான வடிகால் என்ன என்று அனேகர் யோசித்து தவறான முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். மற்றொரு பக்கத்தில் செக்ஸ் என்றாலே அது தப்பான காரியம் என்ற தவறான சிந்தனையில் அதைப் பற்றி திறந்த மனதுடன் பேசுவதையே தவிர்த்துவிடுகின்றனர்.

பாலியல் உணர்வுகள் மனிதனுக்கு நல்ல நோக்கத்தில் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதை முறையாக அணுகும்போது அது மனுக்குலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செக்ஸ் சிந்தனைகள் வருவது இயல்பு என்றாலும் அதை சரியான விதத்தில் அணுகுவதிலேயே முதிர்ச்சி வெளிப்படும்.

பரிசுத்த வேதாகமத்தில் யோசேப்பு என்ற வாலிபன் தன் எஜமானனின் மனைவியால் தவறான பாலியல் உறவுக்கு வற்புறுத்தப் பட்ட போது “என் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி?” என்று சொல்லி அவ்வாலிபன் விலகி ஓடினான். ஆம் தவறான உறவுகள் தனிமனிதனுக்கு மட்டுமல்ல, அவனைப் படைத்த இறைவனுக்கும் எதிரான செயலே. பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடுவதே மிகவும் ஞானமான செயல். ஆனால் தொடர்ந்து அப்படிப் பட்ட சூழ்நிலைகளின் மத்தியில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், தண்ணீர் மேல் தாமரையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

என் தலைக்கு மேல் பறவை பறந்து செல்வதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் தலையில் அந்த பறவை கூடு கட்டுவதை என்னால் தடுக்க முடியும் என்று ஒருவர் சொன்னது போல, நீங்கள் நினைத்தால், பாலியல் சிந்தனை உங்களை ஆக்ரமித்துக் கொள்ளாதபடி உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். கொஞ்சம் இடம் கொடுத்தால், அது முழுமையாக உங்களை ஆட்கொண்டுவிடும் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் முன்னுரிமைப் பட்டியல்களில் தெளிவாக இருங்கள்.